
நாகப்பட்டினம்: மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.150 கோடி மதிப்பிலான போதைப் பொருளை வேளாங்கண்ணியில் க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர். காரில் ரகசிய அறை அமைத்து கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் கடத்த இருப்பதாக நாகை க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வேளாங்கண்ணி ஆரிய நாட்டு தெருவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் ஆய்வாளர் ராமச்சந்திர பூபதி தலைமையிலான க்யூ பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் (ஜூன் 13) இரவு தீவிர சோதனை நடத்தினர். விடுதியில் ஓர் அறையில் தங்கியிருந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gSGXIk1
0 Comments