Crime

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவுக்குச் சென்று விட்டு இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் டிராக்டரில் ஊர் திரும்பிய போது, அரசு பேருந்து மோதி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயம் அடைந்தனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சேடப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த 20 பேர் ரெட்டியார்சத்திரம் அடுத்த கதிரையன்குளம் அருகேயுள்ள கருப்பசாமி கோயிலில் நடந்த ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாவுக்கு நேற்று (ஜூன் 21) டிராக்டரில் சென்றுள்ளனர். டிராக்டரை செல்வ குமார் (35) ஓட்டியுள்ளார். திருவிழா முடிந்து இன்று (ஜூன் 22) சனிக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஊர் திரும்பியுள்ளனர். திண்டுக்கல் - பழநி சாலையில் வந்தபோது திருச்சியில் இருந்து பழநிக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4duC5Gt

Post a Comment

0 Comments