
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம்களியக்காவிளையில், கேரளாவைச் சேர்ந்த வியாபாரியை காருக்குள் கொலை செய்து,ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
களியக்காவிளையை அடுத்த ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நேற்று முன்தினம் இரவு கேரள பதிவெண் கொண்ட கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, காருக்குள் இளைஞர்ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wZvTDfz
0 Comments