
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சட்ட விரோத பணப் பரிமாற்ற விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தற்போது அவரது சகோதரரிடமும் அமலாக்கத் துறை நேற்று விசாரணை மேற்கொண்டது.
இதுதொடர்பாக ஜாபர் சாதிக்கை டெல்லி என்சிபி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர்.இந்நிலையில், அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் 9-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, ஹோட்டல்கள், திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உட்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/b3Fac6j
0 Comments