Crime

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசிபாளையம் எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் வடிவேல் (30). ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி திவ்யா (24). கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி, வடிவேல் காணாமல் போனதாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, வடிவேலுவைத் தேடிவந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூரை சேர்ந்த பாலாஜி (48) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, வடிவேல் குடிபோதையில் திவ்யாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததால், திவ்யா,அவரது தாய் மரியாள் (48) மற்றும் தந்தை தேவராஜ் (50) ஆகியோருடன் சேர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஷம் கொடுத்தும், கட்டையால் அடித்தும் கொலை செய்து, உடலை திருப்பூர் - தாராபுரம் சாலையில் கிணற்றில் போட்டுவிட்டதாக பாலாஜி தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/M1Yw0yq

Post a Comment

0 Comments