Crime

மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (48), இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு ஜெயசுதா (23) என்ற மகளும், தாமரைச்செல்வன் (22) என்ற மகனும் உள்ளனர். தாமரைச்செல்வன் எடப்பாடி அருகே இருப்பாளி அடுத்த வேப்பமரத்தூரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி இருந்து வெல்டிங் மற்றும் ஆடு அறுக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேச்சேரியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு வெங்கடேஸ்வரன், தனலட்சுமி, ஜெயசுதா ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து வெங்கடேஸ்வரன் மற்றும் அவரது குடும்பத்தினர் இருப்பாளியில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/S2kgMmp

Post a Comment

0 Comments