Crime

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9-வது நடைமேடையில் கேட்பாரற்று கிடந்த 11 கிலோ கஞ்சாவை ரயில்வேபோலீஸார் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.

பல்வேறு வடமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தடையும் விரைவு ரயில்களில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒடிஸா மாநிலம் பூரியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரு விரைவு ரயில் நேற்று முன்தினம் மாலை வந்தது. அந்த ரயிலில் இறங்கி வந்தவர்களை ரயில்வே போலீஸார் கண்காணித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JYRloks

Post a Comment

0 Comments