
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே 2012-ல் காரில் சாராயம் கடத்திச் சென்றவர்களை, நடமாடும் சோதனைச் சாவடி பிரிவைச்சேர்ந்த போலீஸார், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்றனர்.
இருசக்கர வாகனத்தில் சென்றதலைமைக் காவலர் ரவிச்சந்திரன்(45), கொப்பியம் அரிகட்டி மதகு அருகில் கடத்தல்காரர்கள் சென்ற காரை மறித்துள்ளார். அப்போது காரை ஓட்டிய அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த கலைச்செல்வன் (54) என்பவர், ரவிச்சந்திரன் மீது காரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றார். இதில் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரன், சென்னையில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JfZlsvX
0 Comments