Crime

படப்பை: தாம்பரம் அருகே படப்பை வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் சவுத் இந்தியன் வங்கி அமைந்துள்ளது. அருகிலேயே அதன் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் அந்த ஏடிஎம்முக்கு பணம் நிரப்பும் ஊழியர்கள் கடந்த 6-ம் தேதி மாலையில் வங்கி ஏடிஎம்மில் ரூ. 23 லட்சத்து 35 ஆயிரத்து 300 பணத்தை நிரப்பி உள்ளனர். இதே போல் பணம் நிரப்பிய பின்பு வழக்கமாக நான்குஐந்து நாட்களுக்கு பின்பு தான்மீண்டும் வந்து பணம் நிரப்புவார்கள்.

இந்நிலையில் ஏடிஎம் மில் பணம் நிரப்பிய பின்பு அடுத்த இரண்டு நாட்களில் வாடிக்கையாளர்கள் அந்த ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியவில்லை. அனைவரும் ஏடிஎம்மில் பணம் இல்லை என்ற தகவலை வங்கியில் தெரிவித்துள்ளனர். இதனால் வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை ஆய்வு செய்தபோது வாடிக்கையாளர்கள் பணம்எடுக்க முடியாதபடி ஏடிஎம் நம்பர்லாக் செய்யப்பட்டுள்ளது என்பதைகண்டுபிடித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DVAJOaH

Post a Comment

0 Comments