
சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அப்போது மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா முகவரியுடன் ராஜ் பர்மன் (31) என்ற இளைஞரும், சுப்ரதா (26) என்ற இளம்பெண்ணும் கோலாலம்பூரிலிருந்து வந்தனர்.
அவர்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர்கள் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்துவிட்டு ரயிலில் கொல்கத்தா செல்வதற்கான டிக்கெட்களும் வைத்திருந்ததால், அதிகாரிகளுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ivIU4LJ
0 Comments