
செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள பாடியநல்லூர் ஜோதி நகர்-5-வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (48). இவர், கடந்த ஆண்டு கஞ்சா வழக்கு தொடர்பாக மதுரை அருகே உள்ள திருப்பாலை போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம் சமீபத்தில் உயிரிழந்தார். ஆகவே, தந்தையின் 16-ம் நாள் காரியத்துக்கு பரோல் கேட்டு நீதிமன்றத்தில் பரமேஸ்வரன் விண்ணப்பித்தார். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு 2 நாட்கள் பரோல் வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Ob1VagE
0 Comments