Crime

சென்னை: செல்போனில் சிறுவர்களின் ஆபாச படங்களைபதிவிறக்கம் செய்து பார்த்ததாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பசட்டத்தின்கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்த இளைஞர் மனு தாக்கல் செய்தார்

.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, ‘‘ஆபாச படங்களை மற்றவர்களுக்கு அனுப்புவதுதான் குற்றம். தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது குற்றம் அல்ல’’ என்று கூறி, அந்த இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/L3N4IWj

Post a Comment

0 Comments