
புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில், வாகன ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மினாமூரைச் சேர்ந்தவர் ஜாகீர் ஹூசைன் ( 41 ). இவர் புதுச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி ஒதியன் சாலைப் பகுதியில் 11 வயதுச் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ஜாகீர் ஹூசைனை கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/G6O9Ugc
0 Comments