
சென்னை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் ஐ.டி. ஊழியர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் குருராஜன் (29). இவர் பெருங்குடியில் உள்ளஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி செய்தார். அதே பகுதியில் நண்பர்களுடன் வாடகை அறையில் தங்கி இருந்தார். இவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் இந்த விளையாட்டில் அவர் பல லட்சம் ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l4IcxFY
0 Comments