
வங்கதேச எல்லையை சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றதாக சேலையூர் காவல் உதவி ஆய்வாளரை வங்கதேச ராணுவம் கைது செய்துள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள உதவி ஆய்வாளரின் முழு விவரங்களையும் கேட்டு அந்நாட்டு ராணுவம் தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான் செல்வராஜ் (47). இவர் சென்னை மடிப்பாக்கத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து தாம்பரம் சேலையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு கோரி கடிதம் வழங்கிவிட்டு சென்றவர், அதன்பிறகு பணிக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xjsd0cN
0 Comments