
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், வெளிநாடுதப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
போதைப் பொருள் தயாரிக்க பயன்படும் முக்கிய ரசாயனப் பொருளான சூடோபெட்ரின், இந்தியாவில் இருந்து தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gNMaz02
0 Comments