
சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் உள்ள பெஜவாடா லைன் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் (40). இவரது எதிர் வீட்டில் சாந்தி (37) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சாந்தி, தான் தண்ணீர் பிடித்த பிளாஸ்டிக் குடத்தை முனியம்மாள் வீட்டின் வாயிலில் வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த முனியம்மாள் "ஏன் இங்கு குடத்தை வைத்துள்ளாய்?" என்று கேட்டுள்ளார். தொடர்ந்து இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/BlGp56t
0 Comments