Crime

பனாஜி: 4 வயது மகனை கொலை செய்த விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ததில் பெங்களூருவைச் சேர்ந்த சுசானா சேத்துக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவரது கணவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் சுசானாவிடமிருந்து பிரிந்து இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். சுசானா தனது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஏஐ ஆய்வுக்கூட நிறுவனத் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார் சுசானா சேத். இந்நிலையில், கோவாவில் ஒரு ஓட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற சுசானா சேத் போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/0v9DiMj

Post a Comment

0 Comments