
மும்பை: சிவசேனா - உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த கட்சி பிரமுகர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரை சுட்டுக் கொன்ற நபரும் தற்கொலை செய்து கொண்டார். வியாழக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மும்பை, தஹிசார் பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த 41 வயதான அபிஷேக் கோசல்கர் தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வினோத் கோசல்கரின் மகன் ஆவார். அவரை மொரிஸ் நோரோன்ஹா எனும் நபர் கொலை செய்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்திய மொரிஸ் நோரோன்ஹாவும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தஹிசார் பகுதியில் உள்ள போரிவாலியில் நடைபெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MbdOKfQ
0 Comments