
விழுப்புரம்: பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது தப்பியோடிய பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீஸார் சுட்டு பிடித்தனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இரு போலீஸார் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை, மாதவரம், திருமலை நகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (21). கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் பவித்ரா (20). இவர், சென்னையில் உறவினர் வீட்டில் தங்கி, துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 23-ம் தேதி இரவு திருவண்ணாமலை செல்ல சென்னையில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UxvfpQZ
0 Comments