
புதுடெல்லி: புனே மற்றும் டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸார் 2 நாட்களாக நடத்திய தீவிர சோதனையில் ரூ.2,500 கோடி மதிப்புள்ள மெபெட்ரோன் (எம்டி) போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதுடெல்லி மற்றும் புனே நகரம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் 1,100 கிலோ எடை கொண்ட தடைசெய்யப்பட்ட மெபெட்ரோன் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் இதை ‘மியாவ் மியாவ்’ என்ற பெயரில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு ரூ.2,500 கோடியை தாண்டும். சோதனையின்போது, மெபெட்ரோன் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 700 கிலோ மெபெட்ரோன் கைப்பற்றப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின்படி, டெல்லியின் ஹவுஸ் காஸ் பகுதியில் இருந்து 400 கிலோ செயற்கை ஊக்க மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/GasAJnu
0 Comments