
சென்னை: போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை மாதத்தில் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பினாமி பெயரில் வாங்கிக் குவித்துள்ள சொத்துகளை முடக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கத்தை தடுக்கும் வகையில், போதைப் பொருள் கடத்துபவர்கள், விற்பவர்கள், பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கையை காவல் துறை எடுத்து வருகிறது. இச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதோடு அவர்களது பெயரிலும், பினாமி பெயர்களிலும் வாங்கிக்குவித்துள்ள சொத்துகளை அடையாளம் கண்டு பறிமுதல் செய்யும் பணியும், வங்கிக் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sFWjS2p
0 Comments