
சேலம்: தனது மருமகள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த விசாரணைக்கும் தயார், என சேலம் மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மகன் சுதர்சன் பாபு ( 42 ). இவரது மனைவி சுதா ( 38 ). இவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, மகள் ஒருவர் உள்ளார். சேலம் கன்னங்குறிச்சி அருகே சின்னக் கொல்லப்பட்டியில் மனைவி யுடன் சுதர்சன் பாபு வசித்து வந்தார். நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நினை விழந்த நிலையில் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் சுதா கொண்டு வரப்பட்டார். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KAhk8YL
0 Comments