
திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(53). நிலத் தரகரான இவர், கடந்த 22-ம் தேதி பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதூரில் உள்ள 70 சென்ட்நிலத்துக்கு வழிகாட்டி மதிப்பீடுசெய்வதற்காக சமீபத்தில் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர்அலுவலகத்தை அணுகினார்.
அப்போது, அந்த நில ஆவணத்தை வழிகாட்டி மதிப்பீடுக்காக மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க, ஆர்.கே.பேட்டை சார்பதிவாளரான, கடலூர் மாவட்டம்,ஆலாடு கிராமத்தைச் சேர்ந்த செல்வராமச்சந்திரன்(39) ரூ.50ஆயிரத்தை லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்கு ரூ.35 ஆயிரம்தருவதாக பேசப்பட்டது. ஆனால், லஞ்சம் கொடுக்கவிரும்பாத ஜெய்சங்கர், செல்வராமச்சந்திரன் மீது திருவள்ளூர்லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TYRtFnp
0 Comments