
சென்னை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை தேசியநகர் 4-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (34). சமையல் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி இரவு 10 மணி அளவில் இவரது வீட்டருகே இளைஞர்கள் 3 பேர் புகை பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கஞ்சா புகைத்து போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களிடம் சென்ற சிவா, ‘‘பெண்கள், குழந்தைகள் எல்லாரும் தூங்கும் நேரம். இங்கு ஏன் சத்தம் போடுகிறீர்கள், வேறு எங்காவது சென்று பேசுங்கள்’’ என கூறியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த 3 பேரும், சிவாவிடம் வாக்குவாதம் செய்துவிட்டு கோபத்துடன் அங்கிருந்து சென்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JN8sfIV
0 Comments