
ஜெய்சால்மர்: இளைஞர்கள் சிலர் மதுபோதையில், கார் ஓட்டியபடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக வீடியோ எடுத்ததால் விபத்தில் சிக்கி தாய்,மகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மது அருந்திவிட்டு ஜெய்சால்மர் பகுதியிலிருந்து பார்மர் நோக்கி காரில் வேகமாக சென்றனர். அவர்கள் காரில் வேகமாக செல்வதை வீடியோ எடுத்துஇன்ஸ்டாகிராமில் பதிவிட விரும்பினர். அப்போது ஜெய்சால்மர் மாவட்டத்தின் தேவிகோட் என்ற இடத்தில்மனீஷ் (13) என்ற சிறுவனும், அவரது தாய் மென்கலா என்பவரும் ரோட்டை கடந்து சென்றனர். மிக வேகமாக வந்த கார், ரோட்டைகடந்து சென்ற இருவர் மற்றும் பசுமாடு மீது மோதியபின் மற்றொரு கார் மீது மோதி நின்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NE6yfDg
0 Comments