
லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மெட்டாவெர்ஸில் விர்ச்சுவல் முறையில் கூட்டு பாலியல் சீண்டலுக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த சிறுமி மெட்டாவெர்ஸில் விஆர் ஹெட்செட் அணிந்து விர்ச்சுவல் முறையில் கேம் ஆடிய போது அவரது டிஜிட்டல் அவதாரை பாலியல் ரீதியாக யாரென தெரியாத சிலர் கூட்டாக வன்புணர்வு செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமிக்கு உடல் ரீதியாக காயம் ஏதும் இல்லை என்றாலும் அந்த செயலின் தாக்கத்தின் காரணமாக உளவியல் ரீதியாக அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தான் இந்த வழக்கில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு. ஆனால், விர்ச்சுவல் குற்றங்களுக்கு தீர்வு காண்பதில் தற்போதுள்ள சட்டங்களின் நிலை குறித்த கேள்வியும் இங்கு எழுகிறது என அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hvxkn0e
0 Comments