
சென்னை: புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர்மகேஸ்வரி. இவர் புகாரின்பேரில் அதே பகுதியில் உள்ள பூமி ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள மைதானத்தில் இரவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மது அருந்திக் கொண்டிருந்த 20 பேரை அங்கிருந்து கலைந்து செல்லும்படி எச்சரித்தார்.
இதனால் கோபம் அடைந்த அவர்களில் சிலர் `நாங்கள் வழக்கறிஞர்கள், இங்கு அமர்ந்து தான் மது அருந்துவோம்' எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இதை உதவிஆய்வாளர் மகேஸ்வரி தனது செல்போனில்படம் பிடித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tfqPX9n
0 Comments