Crime

சிவகங்கை: காளையார்கோவில் அருகே கொள்ளையர் அச்சத்தால் பகலிலேயே வீடுகளில் கிராம மக்கள் முடங்கினர். கொள்ளையர்களை கைது செய்ய வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்த 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முடிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஜன.26-ம் தேதி அதிகாலை வீட்டில் தூங்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை இரும்புக் கம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு முகமூடி கும்பல் நகைகளை கொள்ளையடித்து தப்பியது. காளையார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்தனர். எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. கல்லுவழி கிராமத்தில் சாலையொட்டி உள்ள தேவாலயத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QASCNYH

Post a Comment

0 Comments