
சென்னை: சென்னை நொளம்பூரில் நண்பரை கொலை செய்துவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ்(25). மென்பொறியாளரான இவர், துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
கடந்த திங்கள் அன்று வழக்கம்போல லோகேஷ் வேலைக்குச் சென்றார். ஆனால், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது குடும்பத்தினர் அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OjL5iHa
0 Comments