
பெங்களூரு/பனாஜி: மேற்கு வங்கத்தை சேர்ந்தசுச்சானா சேத் (39) பெங்களூருவில் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை (The Mindful AI Lab) தொடங்கி, அதன் தலைமை செயல்அதிகாரியாக உள்ளார். இவர் தனதுகணவர் வெங்கட் ராமனுடன் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வசித்தார். இந்நிலையில் சுச்சானா சேத், தனது 4 வயது மகனை கொன்ற வழக்கில் சிக்கியுள்ளார்.
இவர் போலீஸில் சிக்கியது எப்படி என கோவா விடுதி மேலாளரும் இவ்வழக்கின் புகார்தாரருமான ககன் கம்பீர் கூறியதாவது: சுச்சானா சேத் (39) கடந்த 6-ம் தேதி அதிகாலை பெங்களூருவில் இருந்து 4 வயது மகனுடன் எங்கள் விடுதிக்கு வந்தார். அவருக்கு அறை எண் 404-ஐ ஒதுக்கினோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JS6xHTI
0 Comments