Crime

திருச்சி: திருச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லரியில் முதலீடு செய்தவர்களுக்கு முதிர்வுத் தொகையைத் தராமல் அந்த நிறுவனம் ஏமாற்றிய தாகப் புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அந்த நிறுவனத்தில் முதலீடுசெய்தவர்கள் அளித்த புகார்களின் பேரில், ஜுவல்லரி உரிமையாளர்கள் மதன், அவரதுமனைவி கார்த்திகா உள்ளிட்டோர் மீது திருச்சிபொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், திருச்சிகிளை மேலாளர் நாராயணனைக் கைது செய்தனர். ஆனால், மதன், கார்த்திகா ஆகியோர் தலைமறைவாக இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SoxmcH3

Post a Comment

0 Comments