Crime

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை செய்த கேரளாவைச் சேர்ந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.

கொடைக்கானலுக்கு ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை தாராளமாக நடக்கிறது. இந்நிலையில் இன்று (டிச.14) காலை கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூரில் ஒரு தனியார் விடுதியில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VtJMDlu

Post a Comment

0 Comments