Crime

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை எதிரேயுள்ள புத்தூர் ஆபீசர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் பிரபு என்ற பிரபாகரன்(51). பாமக தொழிற்சங்க நிர்வாகியாக இருந்த பிரபாகரன், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இவருக்கு மனைவி மற்றும் வழக்கறிஞருக்கு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

திருச்சி அரசு மருத்துவமனை அருகே ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் நடத்தி வந்த பிரபாகரன் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிலவாரங்களுக்கு முன்பு கத்தியைக்காட்டி மிரட்டியதாக ராமகிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பிரபாகரன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் அண்மையில் வெளியே வந்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ewNTp5y

Post a Comment

0 Comments