Crime

சென்னை: சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு இயக்குநர் அரவிந்தன், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YRopN8V

Post a Comment

0 Comments