
புதுடெல்லி: மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல்ஆணையம் கடந்த மாதம் 9-ம்தேதி அறிவித்தது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள்அமலுக்கு வந்தன.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் முடிந்து விட்டன. ராஜஸ்தானில் வரும் 25-ம் தேதியும் தெலங்கானாவில் 30-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, இந்த 5 மாநிலங்களிலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1,760 கோடி மதிப்பிலான பொருட்களை பறிமுதல்செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பரிசுபொருட்கள், மது, போதைப்பொருள், ரொக்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2vO1VJh
0 Comments