Crime

ராமேசுவரம்: தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 137 கிலோ கஞ்சாவை, யாழ்ப்பாணம் மாவட்டம் எழுவைத் தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும்பாக். நீரிணைப் பகுதி வழியாக, இலங்கைக்கு போதைப்பொருட்கள், கடல் அட்டை உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், தமிழகத்திலிருந்து போதைப் பொருட்களைக் கடத்தி வருவதாக இலங்கைகடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம், எழுவைத் தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/dvhaRZx

Post a Comment

0 Comments