
சென்னை: ஆன்லைன் மூலம் ரூ.3.9 லட்சம் பெற்று மோசடி செய்ததாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தங்களது நிறுவனத்தை பிரபலபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியது. முதல் கட்டமாக தங்கள் நிறுவனம் பெயரில் விளம்பரம் செய்ய முடிவு செய்தது.
இதற்காக குடைகளை வாங்கி அதில், தங்கள் நிறுவனத்தின் பெயர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை பதிவு செய்து பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக 1,800 குடைகளை வாங்க ஆன்லைன்னில் முன்பதிவு செய்தனர். இதற்கு கட்டணமாக ரூ.3.9 லட்சம் அனுப்பி வைத்தனர். ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jPqDWtl
0 Comments