Crime

சென்னை: திருவான்மியூரைச் சேர்ந்த பெயின்டரை கொலை செய்த நபர், காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். சென்னை நீலாங்கரை அறிஞர் அண்ணாநகர் 7-வது தெருவை சேர்ந்தவர் கமால் (47). இவர், ரத்த கறைப்படிந்த ஆடையுடன் திருவான்மியூர் காவல் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்கு அவர் சொன்ன தகவலை கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னை திருவான்மியூர் பி.டி.கே.நகரை சேர்ந்த பெயின்டர் செந்தில்குமார் (51) என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக அப்போது அவர் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fesAuBr

Post a Comment

0 Comments