
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே குடிசை வீட்டில் கர்ப்பிணிகளின் கருவில் வளருவது ஆணா, பெண்ணா? என கண்டறியும் ஸ்கேன் பரிசோதனை செய்ய முயன்ற புகாரில் பிரபல ஸ்கேன் மைய புரோக்கரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டு கிராமத்தில் குடிசை வீடு ஒன்றில் கர்ப்பிணிகளின் கருவில் வளரும் குழந்தை குறித்த சோதனை நடத்துவதாக கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் உதவியுடன் அந்த குடிசை வீட்டில் ஆய்வு செய்த போது,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vJkeXHm
0 Comments