
புதுடெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் கள்ளத் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்கள் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பலர் கைதுசெய்யப்படுகின்றனர். இந்நிலையில், பெண்களும் இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் அதிர்ச்சி தகவல் முதல்முறையாக வெளியாகியுள்ளது.
டெல்லி எம்.பி. சாலையில் நேற்று பெண்கள் இருவர் சந்தேகத்திற்கு உரிய வகையில் நடமாடுவதை கண்ட போலீஸார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்பெண்களின் பைகளை சோதனையிட்டதில் அவற்றில் 10 கைத்துப்பாக்கிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சட்டவிரோத கள்ளத் துப்பாக்கிகளான அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vHQ8L7k
0 Comments