Crime

சேலம்: சேலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு செய்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் கருங்கல்பட்டி 56-வது வார்டு திமுக செயலாளர் முருகேசன். இவர் செவ்வாய்ப் பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய நாம் தமிழர் கட்சி நிர்வாகி குமரேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். இதன் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aBr94Jk

Post a Comment

0 Comments