
நாமக்கல்: எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகரின் மனைவி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த தனியார் காஸ் ஏஜென்சி ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி (70). நேற்று காலை அவரது வீட்டுக்கு நாமக்கல்லைச் சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவன ஊழியர் அருண் குமார் (25) என்பவர் சிலிண்டரை மாற்றுவதற்கு வந்துள்ளார். அப்போது பார்த்தசாரதியின் பக்கத்து வீட்டுக்காரரான தன லட்சுமி (60) என்பவர் தனது வீட்டு எரிவாயு சிலிண்டரில் கசிவு உள்ளது. அதனை சரி செய்து தரும்படி கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/26cYjsf
0 Comments