
சிவகங்கை: மானாமதுரை அருகே ஏ.விளாக்குளத்தைச் சேர்ந்தவர் குமரேஸ்வரி. கணவர் கோவிந்தன் மரணமடைந்த நிலையில், தனது மகன் விக்ரமனுடன் (20) வசித்து வந்தார். டிப்ளமோ முடித்த விக்ரமன் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அவர் தனது நண்பர்களுடன் காரில் நேற்று முன் தினம் காளையார் கோவிலில் நடைபெற்ற மருது சகோதரர்கள் குரு பூஜைக்குச் சென்றார். கொல்லங்குடி அருகே சென்ற போது காரில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளையார் கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pXPeKnO
0 Comments