Crime

கோவை: சவாரி புக்கிங் செய்வது போல மொபைல் ஆப் மூலம் செயல்படும் டாக்ஸி நிறுவன ஓட்டுநர்களிடம் நூதன முறையில் நிதி மோசடி செய்யும் சம்பவங்களால் ஓட்டுநர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஒருபுறம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளவில் பல்வேறு துறைகள் மிகச் சிறப்பான வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், மறுபுறம் அதே தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி தினந்தோறும் பல்வேறு வழிகளில் சைபர் கிரைம் குற்றங்களில் ஈடுபடும் ஆசாமிகளால் மக்கள் பலர் நிதி இழப்பை சந்திக்கும் அவலங்களும் தொடர்கின்றன.

கோவையில் மொபைல் செயலி மூலம் செயல்படும் பல்வேறு தனியார் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்களை குறி வைத்து புதுமையான நிதி மோசடி சம்பவங்கள் நடப்பதாக ஊழியர்கள் தெரிவித்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாக்ஸி ஓட்டுநர்கள் கூறியதாவது: முதலில் போனில் தொடர்புகொள்ளும் நபர் வாடிக்கையாளர் போல பேசி தனக்கு டாக்ஸி வேண்டும் என கூறுகிறார். உதாரணத்துக்கு சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இருந்து சிங்காநல்லூர் செல்ல வேண்டும் என்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/p3Tj6kR

Post a Comment

0 Comments