
கோவை: கோவை அருகே பள்ளி வளாகத்தில் உள்ள நிலத்தடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சு.முத்துசாமி, மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.50 ஆயிரம், மாவட்ட திமுக சார்பில் ரூ.1 லட்சம், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் என ரூ.2.50 லட்சத்துக்கான காசோலைகளை பெற்றோரிடம் வழங்கினார். கோவை வேடப்பட்டி சாலை நாகராஜபுரத்தில் உள்ள அன்னை சத்தியா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக். கூலித் தொழிலாளி. இவரது மகன் குகன் ராஜ் (6) தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/i7Zq32v
0 Comments