
சென்னை: மனைவியின் பிறந்த நாளுக்கு பரிசு அளிப்பதற்காக சக பெண் ஊழியரை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்த அஜித்குமார், தனது மனைவி மகாலட்சுமியின் பிறந்த நாள் அன்று அவருக்கு தங்க நகை ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டார். இதற்காக தன்னுடன் பணிபுரிந்த சக பெண் ஊழியரான வேல்விழியிடம் பணமும், நகையும் கேட்டுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/poZzjGm
0 Comments