
கோவை: கோவை கணபதி வஉசி நகரைச் சேர்ந்தவர் நிதீஷ்குமார் (22). இவர் மீது ரத்தினபுரி காவல் நிலையத்தில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
காந்திபுரம் 9-வது வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (22). இவர் மீது சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை வழக்கு, கஞ்சா விற்பனை வழக்கு ஆகியவை உள்ளன. நிதீஷ்குமார் மீதான வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7eDYRqJ
0 Comments