
சென்னை: எழும்பூரில் ரவுடியும், மந்தைவெளியில் பெயின்டரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்றுஅடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொலை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை புழல், காவாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்திருந்தார். அப்போதுஅங்கு, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கும்பல் சத்யாவை சுற்றிவளைத்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l5b97DN
0 Comments