
நெகமம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வடசித்தூர் பகுதியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த சமத்துவபுரத்தில் முன் பகுதியில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று அதிகாலை மர்ம நபர்களால் பெரியார் சிலை மீது மாட்டு சாணத்தை கரைத்து ஊற்றியிருந்ததை அவ்வழியாக சென்றவர்கள் கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். நெகமம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, தண்ணீர் ஊற்றி கழுவி சிலையை சுத்தம் செய்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு திரண்ட திமுக, விடுதலை சிறுத்தை கட்சியினர், பெரியார் சிலையை அவமரியாதை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/SPrAUiK
0 Comments